Friday, 24 October 2014

   


                                                   விட்ட முயற்சி


எழுத்து கலை நடிப்பு நாடகம் பாட்டு கூத்து
எதனைத் தேர்ந்து எடுத்து
பொய்யாகப் எப்போதும் போகும் காலத்தில்
மிகச் சிறிய மெய்யாகக் கொஞ்சமேனும்
ஆகலாம்.....
ஓயாத சிந்தனை ஓடியது காலம். அரைகுறை
முயற்ச்சியில் ஆனது வயது.
வாழ்க்கையைக் கடக்க நினைத்தும்
கழிக்கத்தான் முடிகிறது தனியாக..  
வாழ்க்கை தான் நம்மை கடந்து போகிறது
இரக்கமில்லாக் காலத்தின் துணையோடு.